Recent Post

6/recent/ticker-posts

புத்தொழில் சூழலை மேம்படுத்தவும் உலகளாவிய இணைப்புகளை வலுப்படுத்தவும், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT), சேம்பர் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் / DPIIT Signs MoU with Chamber India to Boost Startup Ecosystem and Strengthen Global Linkages

புத்தொழில் சூழலை மேம்படுத்தவும் உலகளாவிய இணைப்புகளை வலுப்படுத்தவும், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT), சேம்பர் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் / DPIIT Signs MoU with Chamber India to Boost Startup Ecosystem and Strengthen Global Linkages

இந்தியாவின் புத்தொழில் சூழலை வலுப்படுத்தவும், புத்தாக்கத்தால் வழிநடத்தப்படும் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது.

இந்தப் கூட்டாண்மையானது, புத்தொழில்கள், பெருநிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் உலகளாவிய பங்குதாரர்களுக்கு இடையேயான ஈடுபாட்டை மேம்படுத்துவதையும், சர்வதேச இணைப்புகள் மற்றும் எல்லை தாண்டிய ஒத்துழைப்பை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது தேசிய திட்டங்களுடன் இணைந்த முயற்சிகள் மூலம் புத்தொழில்களுக்கு ஆதரவளிப்பதுடன், திறன் மேம்பாடு, சுகாதாரம், விவசாயம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் போன்ற முக்கியத் துறைகளில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும்.

இந்தக் கூட்டாண்மையின் கீழ், DPIIT-ஆல் அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில்கள், சேம்பரின் சலுகை உறுப்பினர் தகுதியிலிருந்து 50 சதவீத தள்ளுபடியுடன் பயனடைவார்கள்.

இது ஏற்றுமதி வசதி, அறிவுசார் சொத்துரிமை ஆலோசனை, வணிகப் பொருத்தம் மற்றும் உலகளாவிய தூதுக்குழுக்களில் பங்கேற்பு போன்ற சேவைகளைப் பெற வழிவகுக்கும்.

மேலும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமச்சீரான வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், வளர்ச்சி அடைய விரும்பும் மாவட்டங்கள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பிற வளரும் பிராந்தியங்களில் கவனம் செலுத்தி, இந்தியா முழுவதும் ஐந்து அடைகாப்பு மற்றும் புத்தொழில் ஆதரவு மையங்களை நிறுவவும் சேம்பர் செயல்படும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel