பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தில், ரயில்வே அமைச்சகத்தின் 03 (மூன்று) திட்டங்களுக்கு இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது; இத்திட்டங்களின் மொத்தச் செலவு சுமார் ரூ. 23,437 கோடியாகும்.
இத்திட்டங்களில் நாக்தா – மதுரா 3-வது மற்றும் 4-வது வழித்தடம், குண்டக்கல் – வாடி 3-வது மற்றும் 4-வது வழித்தடம், மற்றும் புர்ஹ்வால் – சீதாப்பூர் 3-வது மற்றும் 4-வது வழித்தடம் ஆகியவை அடங்கும்.
இந்த வழித்தடங்களின் கொள்ளளவு அதிகரிப்பானது ரயில் போக்குவரத்தை (mobility) கணிசமாக மேம்படுத்தும்; இதன் விளைவாக, இந்திய ரயில்வேயின் செயல்பாட்டுத் திறனும் சேவை நம்பகத்தன்மையும் உயரும்.
திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திறன் மேம்பாட்டுப் பணிகள், நாடு முழுவதும் உள்ள பல முக்கியச் சுற்றுலாத் தலங்களான மகாகாலேஷ்வர், ரந்தம்பூர் தேசியப் பூங்கா, குனோ தேசியப் பூங்கா, கியோலாடியோ தேசியப் பூங்கா, மதுரா, பிருந்தாவனம், மந்திராலயம் (ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடம்), ஸ்ரீ நெட்டிக்கண்டி ஆஞ்சநேய சுவாமி வாரி கோயில் (காசாபுரம்), ஷியாம்நாத் கோயில், நைமிஷாரண்யம் (நீம்சார்) உள்ளிட்ட இடங்களுக்கான ரயில் இணைப்பை மேம்படுத்தும்.


0 Comments