மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராயால் அறிமுகப்படுத்தப்பட்ட 'பிறப்பு மற்றும் இறப்பு (திருத்த) மசோதா 2026', எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே விவாதமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது நடைமுறையில் உள்ள 1969-ஆம் ஆண்டின் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் திருத்தம், பிறப்பு மற்றும் இறப்புகளை உரிய நேரத்தில் பதிவு செய்வதை ஊக்குவிக்கவும், தாமதமான பதிவுகளுக்கான நடைமுறைகளைக் கடுமையாக்கவும் வழிவகை செய்கிறது.
1 முதல் 2 ஆண்டுகள் தாமதம்: ஒரு பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்து 1 ஆண்டுக்கு மேலாகி 2 ஆண்டுகளுக்குள் விண்ணப்பித்தால், மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிர்வாக நடுவரின் (Executive Magistrate) ஒப்புதலுக்குப் பிறகே பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும்.
2 ஆண்டுகளுக்கு மேல் தாமதம்: நிகழ்வு நடந்து 2 ஆண்டுகளுக்கு மேல் தாமதமானால், நீதித்துறை நடுவரின் (Judicial Magistrate) நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டுமே பதிவு செய்ய முடியும்.
இச்சட்டத்தின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ்கள் குடிமக்களின் முக்கியமான சட்டப்பூர்வ அடையாளமாகப் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
%20Bill%202026%20Passed%20in%20Lok%20Sabha.webp)

0 Comments