ரஷ்யாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புக்கு இணையாக குஷா நீண்ட தூர ஏவுகணை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய குஷா ஏவுகணைகளின் முதல்கட்ட சோதனையை ஒடிசாவின் ஏபிஜே அப்துல்கலாம் தீவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) சார்பில் நேற்று நடத்தப்பட்டது.
இதில், அதிவேகம் மற்றும் அதி உயரத்தில் இருந்த வந்த வான்வழி அச்சுறுத்தலைப் போன்று செயல்படும் மின்னணு இலக்கை குஷா ஏவுகணை அமைப்பு துல்லியமாக இடைமறித்து அழித்ததாக பாதுகாப்பு அமைச்சக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


0 Comments