பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (31.07.2026) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2026-27 முதல் 2030-31 வரையிலான காலகட்டத்திற்கு, ரூ. 36,441 கோடி ஒருங்கிணைந்த நிதி ஒதுக்கீட்டில், விரிவாக்கப்பட்ட கேலோ இந்தியா திட்டத்திற்கும், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கான மேம்படுத்தப்பட்ட உதவித் திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது, இளைஞர் மேம்பாட்டுக்காகவும், விளையாட்டுகளின் மேம்பாட்டுக்காகவும் அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் மிகவும் லட்சியமிக்க விளையாட்டு மேம்பாட்டுத் திட்டம் இதுவாகும். இந்த நிறுவனங்கள் ஒன்றிணைந்து, நாடு முழுவதும் உலகத்தரம் வாய்ந்த பயிற்சி, விளையாட்டு அறிவியல் ஆதரவு, நவீன உள்கட்டமைப்பு ஆகியவற்றை வழங்கும்.


0 Comments