கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், நாள்தோறும் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
அந்த வகையில், இன்று நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் ப்ரீத்தி பவார் மற்றும் ஜெய்ஸ்மின் லம்போரியா ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர்.
அந்த வகையில், இன்று நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் ப்ரீத்தி பவார் மற்றும் ஜெய்ஸ்மின் லம்போரியா ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர்.
இதன்மூலம் அவர்கள் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி பட்டங்களைக் கைப்பற்றி உள்ளனர்.
இதுதவிர, ஆடவர் மும்முறைத் தாண்டுதல் போட்டியில் பிரவீன் சித்ராவேல் 16.58 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும், செல்வா பிரபு திருமாரன் 16.52 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
அடுத்து, இந்தியாவின் ஜடுமணி சிங் மண்டெங்பாம் ஆண்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதேபோல், 'ஷாட் புட் F57' (Shot Put F57) பிரிவில், இந்தியாவின் சோமன் ரானா மற்றும் சுபம் ஜூயல் ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளி வென்றனர்.
இதன்மூலம், 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை, 8 தங்கம், 15 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்களுடன் 6ஆவது இடத்தில் உள்ளது.


0 Comments