பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மேற்கு வங்க முதலமைச்சர் திரு சுவேந்து அதிகாரி ஆகியோர் இணைந்து, கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூன்று விரிவாக்கத் திட்டங்களுக்கும், யந்திரா இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இரண்டு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினர்.
கொல்கத்தாவில் உள்ள ஜிஆர்எஸ்இ பவனிலிருந்து இன்று (ஆகஸ்ட் 23, 2026) காணொலி வாயிலாக அவர்கள் இந்தத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். சுமார் ரூ.3,500 கோடி மொத்த முதலீட்டில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
இந்நிகழ்ச்சியில் மேற்கு வங்க அரசின் தலைமைச் செயலாளர் திரு மனோஜ் அகர்வால், பாதுகாப்பு உற்பத்தித் துறைச் செயலாளர் திரு சஞ்சீவ் குமார், ஜிஆர்எஸ்இ தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் கமாடோர் திரு பி.ஆர். ஹரி, ஒய்ஐஎல் தலைவர் திரு விஜய்குமார் ஐயர் மற்றும் இரு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


0 Comments