தீபாவளியை முன்னிட்டு உத்தர பிரதேச அரசு கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சிக்கான ஏற்பாடுகளை செய்தது.
கடந்த ஆண்டு தீபோற்சவத்தின் போது, அயோத்தியா நகரில் 9 லட்சம் மண் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டு இருந்தது.
இதனை முறியடிக்கும் முயற்சியாக இந்த ஆண்டில் 15.76 லட்சம் எண்ணெய் விளக்குகள் ஏற்றி கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த சாதனையை படைப்பதில், ஆவாத் பல்கலை கழகத்தின் மாணவ மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலரும் பெருமளவில் பங்காற்றினார்கள். பொதுமக்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.
0 Comments