ஹரியாணாவில் பல்வால் முதல் சோனிபட் வரை 126 கி.மீ. தொலைவுக்கு அரைவட்ட வடிவில் இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
இத்திட்டம் ரூ.5,618 கோடி செலவில் மேற் கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்துக்கு அமைச்சர் அமித் ஷா பரிதாபாத்தில் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், சோனிபட் மாவட்டம் பர்கி என்ற இடத்தில் ரூ.590 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ரயில்பெட்டி புதுப்பிக்கும் தொழிற்சாலையை அவர் காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.
ரோட்டக் நகரில் ரூ.315.40 கோடி செலவில் 6 கி.மீ.தொலைவுக்கு கட்டப்பட்டுள்ள மேம்பால ரயில் பாதை, போன்ட்சிஎன்ற இடத்தில் ரூ.106 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்புகள் ஆகியவற்றையும் அமித்ஷா திறந்து வைத்தார்.
0 Comments