Recent Post

6/recent/ticker-posts

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் 106 வயதான ஷ்யாம் நேஹி காலமானார் / Independent India's first voter Shyam Nehi passed away at the age of 106

  • நம் நாடு சுதந்திரம் அடைந்த பின், முதல் முறையாக 1952 துவக்கத்தில் பொதுத் தேர்தல் நடந்தது. பனி மூட்டம், பலத்த மழை போன்ற மோசமான வானிலை காரணமாக ஒரு சில மாதங்களுக்கு முன், 1951 இறுதியில் ஹிமாச்சல் மாநிலத்தில் தேர்தல் நடந்தது. 
  • இதில், முதல் ஓட்டைச் செலுத்திய பெருமைக்கு உரியவர் ஷ்யாம் சரண் நேஹி. ஹிமாச்சலின் கின்னாவூர் மாவட்டம் கல்பாவில், முதல் ஓட்டை செலுத்தியபோது அவருக்கு வயது 34.
  • இதற்கு பின் இதுவரை நடந்த அனைத்து லோக்சபா, சட்டசபை மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களிலும் நேஹி, தவறாமல் தன் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளார். 
  • இதுவரை 34 தேர்தல்களில் அவர் ஓட்டளித்துள்ளார். இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் விளம்பர துாதராகவும் நேஹி நியமிக்கப்பட்டார்.
  • இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நேஹி, வயது மூப்பு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel