Recent Post

6/recent/ticker-posts

மலேசியாவில் 15-வது பொதுத்தேர்தல் / 15TH GENERAL ELECTIONS IN MALAYSIA

 

  • மலேசியாவில் 15-வது பொதுத்தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. மலேசியாவின் 222 நாடாளுமன்ற தொகுதிகளில் 2 இடங்களில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. 
  • மொத்தம் 220 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்காத நிலையில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது.
  • மலேசியா அரசியல் கட்சிகளில் பக்கத்தான் ஹரப்பான் 80 இடங்களில் வென்றுள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான 111 இடங்களை அந்த கூட்டணி பெறவில்லை. 
  • நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்திய தேசிய முன்னணி கூட்டணி வெறும் 35 இடங்களில்தான் வென்றது. 
  • மலேசியாவின் முக்கியமான அம்னோ கட்சியும் எதிர்பார்த்த இடங்களைப் பெறவில்லை. 
  • ஆனால் பக்கத்தான் தலைவர் அன்வார் இப்ராஹிம், ஆட்சி அமைக்கத் தேவையான 112 இடங்கள் தங்கள் வசம் இருக்கிறது என்கிறார்.
  • மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர், கெடா மாநிலத்தின் லங்காவி தொகுதியில் போட்டியிட்டு பெரும் தோல்வியை சந்தித்துள்ளார்.
  • 1969-ம் ஆண்டு முதல் மகாதீர் வெற்றி பெற்ற இந்த தொகுதியில் தற்போது வெறும் 4,566 வாக்குகள்தான் பெற்றார். 50 ஆண்டுகளில் மகாதீர் சந்திக்கும் முதல் தேர்தல் தோல்வி இது.
  • மலேசியாவில் இந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் எந்த கட்சியும் ஆட்சி அமைக்காது; கூட்டணி ஆட்சிதான் அமையும் என்பது திட்டவட்டமாகி உள்ளது. 
  • மலேசியாவின் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி அமைய உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 
  • பெரிக்கத்தான் நேசனல், தேசிய முன்னணி, சபா மக்கள் கூட்டணிக்கு ஆதரவளிக்கத் தயார் என்று சரவாக் கட்சிகள் கூட்டணி தெரிவித்துள்ளது. 
  • மேலும் இந்த கூட்டணியானது பிரதமர் பதவிக்காக முஹிதின் யாசின் பெயரை பரிந்துரைத்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel