Recent Post

6/recent/ticker-posts

12705 மொர்முகோவ் இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டது / 12705 MORMUKOV ADDED TO INDIAN NAVY

  • ஏவுகணைகளைக் குறிவைத்துத் தாக்கி அழிக்கும் வசதிகொண்ட, மொர்முகோவ் என்ற விசாகப்பட்டினம் கிளாஸ் போர்கப்பல்,  மும்பையில் உள்ள கடற்படைத்தளத்தில், 2022 டிசம்பர் 18ம் தேதி மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது.
  • இதன்மூலம்  உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட  இந்தியக் கடற்படையில் சேர்க்கப்படும் 2-வது விசாகப்பட்டினம் கிளாஸ் டெஸட்ராயர் இது என்ற பெருமை அந்தக் கப்பலுக்குக் கிடைத்துள்ளது.   
  • பி15பி ஏவுகைணை அழிப்பானைக் கொண்ட இந்தப் போர்கப்பல், கடற்படையின் போர்கப்பல் உற்பத்தி அமைப்பு மற்றும் மஸாகான் டாக் கப்பல் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இது, 163 மீட்டர் நீளமும், 17 மீட்டர் அகலமும் கொண்டது. 7400 டன் எடையிலான ஆயுதங்கள் உள்ளிட்டவற்றைச் சுமந்துசெல்லும் இந்தப் போர்கப்பல், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிக வல்லமைகொண்ட போர்கப்பல்களுள் ஒன்றாகும். 
  • குறிப்பாக இந்தியக் கடற்படைத்தளங்களின் மொத்தக் கப்பல்களில் 42 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக்கப்பல்கள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டவையாக  இருப்பது, தற்சாற்பு இந்தியாவிற்கான முனைப்பான முயற்சியின் அடித்தளமாக அமைகின்றன.
  • மேற்கு கடலோரப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க துறைமுக நகரமான கோவாவின் நினைவாக, இந்த போர்கப்பலுக்கு மொர்முகோவ் எனப் பெயிரிடப்பட்டுள்ளது.
  • போர்ச்சுக்கீசியர்களின் ஆட்சியில் இருந்து கோவா விடுதலை பெற்ற 60வது ஆண்டுவிழா 2022ம் ஆண்டு டிசம்பர் 19ம் கொண்டாடப்படுகிறது.  இதை முன்னிட்டு, 2022ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி இந்த கப்பல் முறைப்படி தனது கடற்பயணத்தைத் தொடங்க உள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel