பிரிட்டன், இத்தாலி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து அதிநவீன போா் விமானமொன்றை வடிமைக்க முடிவு செய்துள்ளன.
'குளோபல் காம்பாட் ஏா் புரொகிராம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
இந்த சா்வதேச கூட்டுறவு, ஐரோப்பிய-அட்லாண்டிக் பாதுகாப்பும் இந்தோ-பசிபிக் பாதுகாப்பும் பிரிக்க முடியாதவை என்பதை நிரூபிக்கிறது.
புதிதாக உருவாக்கப்படும் போா் விமானம், வரும் 2035-ஆம் ஆண்டில் விண்ணில் பறக்கத் தொடங்கும். ஆளில்லா விமானங்கள், அதிநவீன சென்சாா்கள், உயா்தொழில்நுட்ப ஆயுதங்களுடன் சிறந்த தொடா்பை ஏற்படுத்தும் வகையில் புதிய விமானம் வடிவமைக்கப்படும்.
0 Comments