Recent Post

6/recent/ticker-posts

ஆக.15-ம் தேதி முதல் தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில்உச்ச நீதிமன்ற தீர்ப்பு / SUPREME COURT ON STATE LANGUAGE FROM 15TH AUG


  • டெல்லி உயர் நீதிமன்றத்தின் கணினிமயமாக்கப்பட்ட கோப்புகளை ஆய்வு செய்ய அனுமதிக்க வகை செய்யும், இணையவழி ஆய்வு மென்பொருள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 
  • இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது: ஆங்கிலத்தில் வெளியாகும் தீர்ப்புகளை 99.9% மக்களால் எளிதாக புரிந்துகொள்ள முடிவதில்லை. உச்ச நீதிமன்றமோ, உயர் நீதிமன்றமோ, பொதுமக்கள் பேசக்கூடிய, புரிந்துகொள்ளக்கூடிய மொழிகளில் தீர்ப்புகளை வழங்கவில்லை என்றால், நீதித் துறையின் சேவை அர்த்தமற்றதாக ஆகிவிடும்.
  • எனவே, ஆங்கிலத்தில் வெளியாகும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை, வரும் ஆக.15-ம் தேதி முதல் தமிழ், இந்தி, குஜராத்தி, ஒடியா ஆகிய 4 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்த்து, நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • தீர்ப்புகளை மொழிபெயர்ப்பது தொடர்பான பணிகளை கவனிக்க நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, அனைத்து உயர் நீதிமன்றங்களும் ஒரு மாவட்ட நீதிபதி உட்பட 2 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel