தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை துணைவேந்தராக, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 60, நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், திருச்சி பாரதிதாசன் பல்கலையில், இயற்பியல் துறை பேராசிரியர் மற்றும் இயக்குனராக பணிபுரிந்து வந்தார்.
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை துணைவேந்தராக கலா, 65, நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கரூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கவுரவ பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இருவருக்கும் பணி நியமன ஆணையை, கவர்னர் மாளிகையில் கவர்னர் ரவி வழங்கினார். இருவரும் பதவியேற்கும் நாளில் இருந்து, மூன்று ஆண்டுகள் துணைவேந்தர் பதவியில் இருப்பர்.
0 Comments