இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஆகியோரது அதிரடி சதத்தால் 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 385 ரன்கள் குவித்தது.
386 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 41.2 ஓவர்களில் 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது.
ஷர்துல் தாக்குர் ஆட்டநாயகன் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருதை ஷுப்மன் கில் தட்டிச் சென்றார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த ரிக்கி பாண்டிங்கின் 30 சதங்கள் சாதனையை சமன் செய்துள்ளார் இந்தியாவின் ரோஹித் சர்மா.
இந்த வகை சாதனையில் சச்சின் டெண்டுல்கர் (49 சதங்கள்), விராட் கோலி (46) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.
0 Comments