Recent Post

6/recent/ticker-posts

காமராஜர் கால ஆட்சி திட்டங்கள் 2 / SCHEMES OF KAMARAJAR REGIMES 2

கல்வி

  • ராஜாஜி அறிமுகப்படுத்திய குடும்பத் தொழில் அடிப்படையிலான பரம்பரை கல்விக் கொள்கையை காமராசர் நீக்கினார்.
  • இவர் 6000 பள்ளிகளை மீண்டும் திறந்தார். மேலும் 12, 000 பள்ளிகளையும் சேர்த்து திறந்தார். இதனால் மாநில அரசானது பெரும் முன்னேற்றம் கண்டது.
  • புதிய பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால் ஏழை கிராமப்புற மாணவர்கள் தங்கள் அருகிலுள்ள பள்ளிக்கு 3 மைலுக்கு (4.8 கிமீ) அதிகமாக நடப்பது தடுக்கப்பட்டது.
  • எந்த கிராமமும் தொடக்கப்பள்ளி இல்லாமலும், எந்தவொரு பஞ்சாயத்தும் உயர்நிலைப் பள்ளி இல்லாமலும் இல்லை. காமராஜ் பதினொன்றாம் வகுப்பு வரை இலவச கல்வியை அறிமுகப்படுத்துவதன் மூலம் கல்வியறிவின்மையை ஒழிக்க முயன்றார்.
  • ஏழை பள்ளி குழந்தைகளுக்கு (உலகில் முதல் முறையாக) ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு வேளை உணவையாது வழங்க மதிய உணவு திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தினார்.
  • இளம் மனதில் சாதி, மதம் மற்றும் வகுப்பு வேறுபாடுகளை களைவதற்கு இலவச பள்ளி சீருடையை அறிமுகப்படுத்தினார்.
  • பிரிட்டிஷ் ஆட்சியின் போது கல்வி கற்றோர் சதவீதம் 7-ஆக மட்டுமே இருந்தது. இவரது ஆடசியில் 37 சதவீீீதமாக உயர்ந்தது.
  • பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கை 180லிருந்து 200-ஆக உயர்த்தப்பட்டது.
  • பல்வேறு திறன்களுக்கு வாய்ப்பளிக்குமாறு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது.
  • காமராஜ் மற்றும் ஸ்ரீ பிஷ்ணுராம் மேதி (ஆளுநர்) ஆகியோர் ஐ.ஐ.டி மெட்ராஸை 1959-ல் தொடங்க முயற்சித்தனர்.

வேளாண்மை

  • காமராஜரின் காலத்தில் முக்கியமான நீர்ப்பாசன திட்டங்கள் திட்டமிடப்பட்டன. கீழ் பவானி,மணிமுத்தாறு, காவிரி டெல்டா, ஆரணி ஆறு, வைகை அணை, அமராவதி, சாத்தனூர், கிருஷ்ணகிரி, புல்லம்பாடி, பரம்பிகுளம் மற்றும் தொய்யாறு அணைகள் இவற்றுள் அடங்கும்.
  • வைகை, சாத்தனூர் முறையே மதுரை மற்றும் வட ஆற்காடு மாவட்டங்களில் என ஏக்கர் நிலங்களை ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிரிட உதவுகிறது.
  • காமராஜரின் காலத்தில் பரம்பிக்குளம் ஆற்றுத் திட்டத்திற்கு ரூ.30 கோடி செலவிட திட்டமிடப்பட்டது. இது விவசாயத் துறையில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • 1957-61-ல் சிறிய நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் 1,628 குளங்கள் தூர்வாரப்பட்டன. 2000 கிணறுகள் தோண்டப்பட்டன.
  • விவசாயிகளுக்கு ரூ. 25 மானியத்துடன் நீண்ட கால கடன்கள் வழங்கப்பட்டன.
  • வறண்ட நிலங்களைக் கொண்ட விவசாயிகளுக்கு அடிப்படையில் எண்ணெய் பொறி இயந்திரங்கள், மின்சார பம்ப் செட்கள் வழங்கப்பட்டது.

இவரது ஆட்சியில் கட்டப்பட்ட பல அணைகள்

  • மணிமுத்தாறு அணை
  • வைகை அணை.
  • ஆழியாறு அணை. 
  • சாத்தனூர் அணை.
  • கிருஷ்ணகிரி அணை.

தொழிற்சாலை மேம்பாடு

  • நெய்வேலி லிக்னெட் திட்டம், நீலகிரி மூல புகைப்படச்சுருள் தொழிற்சாலை, கிண்டியில் உள்ள அறுவை சிகிச்சை கருவி தொழிற்சாலை, சர்க்கரை ஆலைகள், பைகார்பனேட் தொழிற்சாலைகள், சிமெண்ட் தொழிற்சாலைகள், இரெயில்பெட்டி தொழிற்சாலை, மேட்டூர் காகித தொழிற்சாலை ஆகியவை காமராஜரின் காலத்தில் தொடங்கப்பட்டன.
  • திருச்சி பெல்(BHEL) தொழிற்சாலை இவரது காலத்தில் தொடங்கப்பட்டது

நிலச் சீர்திருத்தம்

  • காமராஜர் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குத்தகைதாரர்களின் பாதுகாப்புக்காக, ‘குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் - 1955’ காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. 
  • நிலச் சீர்திருத்தத்தை மேன்மைப்படுத்தும் நடவடிக்கையாக 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலத்துக்கும்மேல் வைத்திருந்தால் அவற்றை அரசுடமையாக்கும் நில உச்சவரம்புச் சட்டம் 1962-ல் கொண்டுவரப்பட்டது.

பஞ்சாயத்து ராஜ்

  • காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, பஞ்சாயத்து ஆட்சி செயல்படுத்தப்பட்டது. 
  • ராஜஸ்தான் மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை நேரு தொடங்கியதையொட்டி தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 1958-ல் காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. 
  • தமிழ்நாடு முழுவதும் காமராஜர் ஆட்சியில் 373 பஞ்சாயத்து யூனியன்களும், 12 ஆயிரம் பஞ்சாயத்துக்களும் தொடங்கப்பட்டுச் செயல்படத் தொடங்கின.

தமிழ் வளர்ச்சி

  • சென்னை மாகாணத்தின் பட்ஜெட்டை 1957-58-ல் தமிழிலேயே சமர்ப்பித்தார் காமராஜர். 1956-ல் தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் கொண்டுவந்ததும் காமராஜர் ஆட்சியே. 
  • 1959 ஜனவரியில், தமிழ் அறிஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ‘தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராகக் கல்வி அமைச்சர் நியமிக்கப்பட்டார். 
  • கல்லூரிப் பாடங்களைக் கற்பிக்கும் மொழியாக தமிழைக் கொண்டுவரவும் மலிவான விலையில் உயர் கல்விக்கான பாடநூல்களைத் தமிழில் வெளியிடவும் இந்த அமைப்பு செயல்பட்டது. இத்துடன் ‘தமிழ்ப்பாடநூல் வெளியீட்டுக் கழகம்’ தோற்றுவிக்கப்பட்டது. 
  • தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு படிப்பவர்களுக்கு மாத ஊக்கத்தொகையும், அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும் வழங்கப்பட்டன. பாடங்கள் தொடர்பான ஆங்கில நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன.
  • காமராஜர் ஆட்சிக்காலத்தில்தான் கலைச்சொல் அகராதி 1960-ல் வெளியிடப்பட்டது. 1956-ல் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டவுடன் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 
  • இதுகுறித்து சட்டமன்றத்தில் 24.2.1961-ல் நடந்த விவாதத்தில் உரையாற்றிய சி.சுப்பிரமணியம், “மெட்ராஸ் ஸ்டேட் என்று குறிப்பிடப்படும் இடத்தில் சென்னை ராஜ்யம் என்று எழுதுவதற்குப் பதில் தமிழ்நாடு என்று எழுதலாம் என பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’என்று தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெரும் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel