Recent Post

6/recent/ticker-posts

கீழடி அகழாய்வு அறிக்கை - மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு / KEELADI EXCAVATION REPORT SUBMITTED TO CENTRAL GOVERNMENT

  • மத்திய தொல்லியல் துறையின், பெங்களூரு அகழாய்வு வட்டாரத்தின் கண்காணிப்பாளராக இருந்தவர், அமர்நாத் ராமகிருஷ்ணன். 
  • இவர், 2014 - 15ம் ஆண்டுகளில், சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு மேற்கொண்டார்.
  • அதில், சங்ககாலத்தைச் சேர்ந்த கட்டடம், சாயத் தொழிலுக்கான உலை, உறை கிணறு, காசு உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்தன.
  • இங்கு, அதிக பரப்பளவில், சங்க கால வாழ்விடப் பகுதி வெளிப்பட்டது; இது இந்திய ஆய்வாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்தகட்ட அகழாய்வும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 
  • இந்நிலையில், அவர், அசாம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். அதன்பின், ஸ்ரீராமன் என்ற ஆய்வாளர், கீழடியில் ஆய்வு செய்து, குறிப்பிடும்படியான தொல்பொருட்கள் கிடைக்கவில்லை என, மத்திய தொல்லியல் துறைக்கு அறிக்கை அளித்தார்.
  • இதனால், கீழடி அகழாய்வை மத்திய தொல்லியல் துறை கைவிட்டது. இதையடுத்து, தொல்பொருட்கள், பெங்களூரு எடுத்துச் செல்லப்பட்டன. இதை ஆய்வாளர்கள் போராடி தடுத்தனர்.
  • மேலும், அமர்நாத்தை மீண்டும் தமிழகத்துக்கு மாற்ற வேண்டும் எனவும், அகழாய்வு அறிக்கையை துரிதமாக வெளியிட வேண்டும் என்றும், பலகட்ட போராட்டங்களை நடத்தினர். 
  • ஆனால், அவர், கோவாவுக்கு மாற்றப்பட்டார். தொல்லியல் ஆர்வலர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக, கடந்தஆண்டு செப்டம்பரில், அவர் மத்திய தொல்லியல் துறையின், சென்னை வட்டார ஆலய ஆய்வுப் பிரிவுக்கு, கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். 
  • அந்த பணியில் இருந்தபடியே, தம் குழுவினருடன், சென்னையில் வைக்கப்பட்டிருந்த கீழடி தொல்பொருட்களை வரைபடமாக மாற்றுவது, மண்பாண்டங்களில் உள்ள எழுத்துப் பொறிப்புகளை அடையாளம் காண்பது, கரிம வேதிப் பொருட்களின் ஆய்வக அறிக்கையின் அடிப்படையில் காலத்தை நிர்ணயிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டார்.
  • இதையடுத்து, டில்லியில் நேற்று மத்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குனர் வித்யாவதியிடம், அமர்நாத் ராமகிருஷ்ணன், இரண்டாண்டு அகழாய்வின் முழு அறிக்கையை சமர்ப்பித்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel