புதுதில்லியில் மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த ஆண்டு விழாவை பிரதமர் தொடங்கி வைத்தார் / PM Inaugurates Maharishi Dayananda Saraswati's 200th Birth Anniversary Celebrations in New Delhi
மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த ஆண்டு விழா கொண்டாட்டங்களை தில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். விழாவில் நினைவு இலச்சினை சின்னத்தையும் அவர் வெளியிட்டார்.
நிகழ்விடத்திற்கு வந்ததும், ஆர்ய சமாஜத்தின் இடங்கள் மற்றும் அங்கு நடைபெற்ற நேரடி நிகழ்ச்சிகளைக் கடந்து பிரதமர் நடந்து சென்று, யாகத்தில் ஆஹுதி அர்ப்பணத்தையும் செய்தார்.
1824-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி பிறந்த மகரிஷி தயானந்த சரஸ்வதி ஒரு சமூக சீர்திருத்தவாதி ஆவார். அவர் காலத்தில் நிலவிய சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து 1875-ம் ஆண்டில் ஆர்ய சமாஜத்தை நிறுவினார்.
சமூக சீர்திருத்தங்கள் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் நாட்டின் கலாச்சார மற்றும் சமூக விழிப்புணர்வில் ஆர்ய சமாஜ் முக்கிய பங்கு வகித்துள்ளது.
0 Comments