Recent Post

6/recent/ticker-posts

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 'எல்.வி.எம்.3 - எம் 3' ராக்கெட் / Isro's LVM3-M3 rocket successfully launched

  • இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், நம் நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு, புவி கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கான செயற்கைக்கோள்களை வடிவமைக்கிறது. 
  • அவை, பி.எஸ்.எல்.வி., - - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன், புவி வட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. பாராட்டுஇதுதவிர இஸ்ரோ, வருவாய் ஈட்டும் நோக்குடன், வணிக ரீதியாக வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைக் கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்துகிறது.
  • அதன்படி, இஸ்ரோவின் வணிகப் பிரிவான, 'நியூ ஸ்பேஸ் இந்தியா' உடன், பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனம், 72 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த ஒப்பந்தம் செய்தது. ஒப்பந்தப்படி, 2022 அக்., 23ல், 36 செயற்கைக் கோள்கள், வெற்றிகரமாக விண்ணில் நிறுத்தப்பட்டன.
  • மீதமுள்ள, 36 செயற்கைக் கோள்களை சுமந்தபடி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, 'எல்.வி.எம்.3 -- எம் 3' ராக்கெட், நேற்று காலை 9:00 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
  • இந்த ராக்கெட், ஜி.எஸ்.எல்.வி., மாக் 3 வகையை சேர்ந்தது; 643 டன் எடை; 43.5 மீட்டர் உயரம் கொண்டது. இதுவே அதிக எடை உடைய ராக்கெட்.
  • பூமியில் இருந்து புறப்பட்ட 19வது நிமிடத்தில் இருந்து, ராக்கெட் திட்டமிடப்பட்ட, 455.53 கி.மீ.,ரில் உடைய புவி வட்ட பாதையில் தகவல் தொடர்புக்கான, 36 செயற்கைக் கோள்களையும், ஒரு சமயத்தில் நான்கு என்ற வீதத்தில், வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel