Recent Post

6/recent/ticker-posts

கோடைக் காலத்தில் வெப்பநிலையை எதிர்கொள்வதற்கான தயார்நிலை குறித்த உயர்நிலை ஆய்வுக் கூட்டத்திற்குப் பிரதமர் தலைமை தாங்கினார் / The Prime Minister chaired a high-level review meeting on preparedness to face summer temperatures

  • வரவிருக்கும் கோடைக் காலத்தில் வெப்பநிலையை எதிர்கொள்வதற்கான தயார்நிலை குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இல்லத்தில், அவரது தலைமையில் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.    
  • அடுத்த சில மாதங்களுக்கான காலநிலை முன்கணிப்பு மற்றும் இயல்பான மழைப்பொழிவு குறித்து, இந்திய வானிலை ஆய்வுத் துறையால் பிரதமருக்கு இந்தக் கூட்டத்தில் விளக்கப்பட்டது. 
  • ரபிப் பருவப் பயிர்களுக்கான காலநிலைத் தாக்கம் மற்றும் முக்கியப் பயிர்களின் விளைச்சல் குறித்தும் அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது. பாசன நீர் விநியோகம், தீவனம், குடிநீர் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. 
  • அவசர காலங்களில் மாநிலங்களின் தயார்நிலை மற்றும் தேவைப்படும் பொருட்களுக்கான மருத்துவமனை உள்கட்டமைப்பு பற்றிய ஆய்வு குறித்தும் பிரதமரிடம் விவரிக்கப்பட்டது. வெப்பநிலை தொடர்பாக ஏற்படும் பேரிடர் தயார்நிலை, தணிப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் பிரதமருக்கு விளக்கப்பட்டது.  
  • இந்தக் கூட்டத்தில் பிரதமரின் முதன்மைச் செயலாளர், அமைச்சரவைச் செயலாளர், உள்துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, வேளாண்துறை, புவி அறிவியல் துறை ஆகியவற்றின் செயலாளர்கள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel