பெண்களுக்கு பொருளாதார அதிகாரவழிமளித்தல் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார் / The Prime Minister was addressing a post-Budget webinar on "Economic Empowerment of Women"
பிரதமர் திரு நரேந்திர மோடி, "பெண்களுக்கு பொருளாதார அதிகாரமளித்தல்" என்பது குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் உரையாற்றினார்.
2023 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முன்முயற்சிகளை திறம்பட செயல்படுத்துவதற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்காக அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கு வரிசையில் இது 11-வது கருத்தரங்காகும்.
2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைவதற்கான ஒரு நல்ல தொடக்கமாக இந்த ஆண்டு பட்ஜெட் காணப்படுவதாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
“வருங்கால அமிர்த காலத்தின் பார்வையில் பட்ஜெட் நோக்கப்பட்டு, சோதிக்கப்பட்டது. நாட்டின் குடிமக்களும் அடுத்த 25 ஆண்டுகளை இத்தகைய இலக்குகளுடன் தங்களை இணைத்துக்கொண்டு பார்ப்பது நாட்டிற்கு ஒரு நல்ல அறிகுறியாகும்,” என்று அவர் கூறினார்.
0 Comments