எதிரி நாட்டு ஏவுகணைகளை, நடுவானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணைகளை இந்தியா ஏற்கெனவே வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இவைகள் தரை இலக்குகளில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள். அதுபோல் போர்கப்பல்களில் இருந்து எதிரி நாட்டு ஏவுகணைகளை வானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணையை டிஆர்டிஓ உருவாக்கியது.
இந்த ஏவுகணை ஒடிசா கடற்கரையில் முதல் முறையாக சோதனை செய்யப்பட்டது. போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை, நடுவானில் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.
இந்த வகை ஏவுகணைகள் ஒரு சில வளர்ந்த நாடுகளின் கடற்படையில் மட்டுமே உள்ளன. தற்போது அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது என ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
0 Comments