Recent Post

6/recent/ticker-posts

டெல்லியில் சர்வதேச புத்த மத உச்சி மாநாடு தொடங்கியது / International Buddhist Summit started in Delhi

  • சர்வதேச புத்த மத உச்சி மாநாடு டெல்லியில் தொடங்கியது. வெளிநாட்டு அறிஞர்கள், புத்த துறவிகள் கலந்து கொண்ட மாநாட்டில், பிரதமர் மோடி பேசுகையில்,''புத்தரின் உன்னத போதனைகள் பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற மக்களை பாதித்துள்ளன. 
  • மக்கள் தங்கள் நலன்களுடன் நாடு மற்றும் உலக நலனுக்கும் முன்னுரிமை அளிப்பது காலத்தின் தேவையாகிறது. ஏழைகள் மற்றும் வளங்கள் இல்லாத நாடுகளை பற்றி உலகம் சிந்திக்க வேண்டும்.
  • புத்தர் காட்டிய வழியை இந்தியா பின்பற்றி வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கு உதவி செய்துள்ளோம். ஒவ்வொரு மனிதனின் வலியையும் தனது வலியாக கருதியது. 
  • புத்தரின் கருத்துக்களை மக்களிடம் எடுத்துரைக்க தொடர்ந்து முயற்சி செய்துள்ளோம். நவீன பிரச்னைகளுக்கு புத்த மதத்தில் தீர்வு இருக்கின்றன. 
  • அவரது போதனைகள் உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வை வழங்குகின்றன. உலகம் போர், பொருளாதார ஸ்திரத்தன்மை, தீவிரவாதம், மதத்தீவிரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற சவால்களை சந்தித்து வருகிறது'' என்றார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel