Recent Post

6/recent/ticker-posts

முதல் முறையாக சுகோய் போர் விமானத்தில் பறந்தார் குடியரசுத் தலைவர் / The President flew in a Sukhoi fighter jet for the first time

  • அசாம் மாநிலத்துக்கு 3 நாள் சுற்றுப் பயணமாக சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தேஸ்பூரில் உள்ள விமானப் படை தளத்துக்கு சென்றார்.
  • விமானப்படை வீரர்கள் அளித்த அணிவகுப்பு மரியா தையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார். அதன்பின் சுகோய் ரக போர் விமானத்தில் அவர் முதல் முறையாக பறந்தார். 
  • அந்த விமானத்தை, குரூப் கேப்டன் நவீன் குமார் இயக் கினார். அந்த விமானம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3 கி.மீ உயரத்திலும், மணிக்கு சுமார் 800 கி.மீ வேகத்திலும் பறந்தது. 
  • சுகோய் போர் விமானத்தில் சுமார் அரை மணி நேரம் பயணம் செய்த குடியரசுத் தலைவர் பிரம்மபுத்ரா முதல் தேஸ்பூர் வரையில் இமயமலைப் பகுதிகளை பார்வையிட்டு பின் விமானப்படை தளத்துக்கு திரும்பினார்.
  • இதன் மூலம் போர் விமானத்தில் பறந்த 3வது இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் 2வது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை திரவுபதி முர்மு பெற்றுள்ளார். 
  • முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கடந்த 2009-ம் ஆண்டு புனே விமானப்படை தளத்தில் இருந்து சுகோய் விமானத்தில் பறந்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel