- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் நடைபெறும் 76-வது உலக சுகாதார மாநாட்டில் உரையாற்றினார்.
- உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் திரு டெட்ரோஸ் அதானம் மற்றும் பல்வேறு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர்.
- அனைவருக்கும் சுகாதாரம் என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில் உரையாற்றிய திரு மன்சுக் மாண்டவியா, சுகாதார அவசர நிலைகளுக்கு இந்தியா, தயாராக உள்ளது என்றும், சுகாதார சேவைகளுக்கு இந்தியா முன்னுரிமை அளிப்பதாகவும் கூறினார்.
- இந்த மாநாட்டில் ‘இந்தியாவில் சிகிச்சை, இந்தியா வழங்கும் சிகிச்சை’என்ற தலைப்பில் நடைபெற்ற மற்றொரு அமர்வில் உரையாற்றிய திரு மன்சுக் மாண்டவியா, இந்த தலைப்பு ஒரே பூமி, ஒரே சுகாதாரம் என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டது என்று தெரிவித்தார்.
- மிகவும் பழைமையான மருத்துவமுறையான ஆயுர்வேதத்தின் தாயகமாக இந்தியா திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார். ஆயுஷ் மருத்துவ முறைகளுக்கான தேவை உலகெங்கிலும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.
0 Comments