கொரோனா வைரஸ் தாக்கம் 2019 ஆண்டு இறுதியில் துவங்கியது. பின் பல்வேறு நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகின் இயல்பு நிலையை உலுக்கியது.
உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த நோயின் தீவிரம் காரணமாக உலக சுகாதார மையம் கொரோனா வைரஸ் பாதிப்பை சர்வதேச மருத்துவ அவசர நிலையாக அறிவித்தது.
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்க்கும் திறன் கொண்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் விளைவாக கொரோனா வைரஸ் வீரியம் தற்போது குறைந்து விட்டது.
இதை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்து இருக்கிறது. எனினும், கொரோனா வைரஸ் முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம்.
கடந்த வாரம் வரை கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டது என்று உலக சுகாதார அமைப்பு டிவிட் செய்துள்ளது.
0 Comments