இந்தியாவை சரக்கு கையாளுதலில் சிறந்த செயல்திறன் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஜேஎன்பிஏ சேர்த்துள்ளது / JNPA has included India in the list of best performing countries in cargo handling
கடந்த நிதியாண்டில் சரக்குப் பெட்டகங்கள் கையாளுதலில் சாதனை படைத்த இந்தியாவின் முதன்மையான பெட்டகத் துறைமுகமான ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் ஜேஎன்பிஏ, ஒரு மாத காலத்தில், சரக்குப் பெட்டகங்கள் கையாளுதலில் உலகளாவிய மற்றொரு சாதனையை எட்டியுள்ளது.
உலக வங்கியால் வெளியிடப்பட்ட சரக்குகள் கையாளுதல் செயல்திறன் குறியீட்டு அறிக்கையின் படி, ஜேஎன்பிஏ வெறும் 22 மணிநேரத்தில் (0.9 நாள்) துரிதமாக சரக்குப் பெட்டகங்களைக் கையாண்டு சாதனை படைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சரக்குகள் தேங்கியிருக்கும் நேரத்தைக் குறைப்பதில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக முனைய இயக்ககங்களின் செயல்பாட்டுத் திறன்- ரயில் மற்றும் சாலை இணைப்பு, மையப்படுத்தப்பட்ட வாகன நிறுத்துமிடம் அறிமுகம், டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவை இதற்கு காரணமாகும்.
0 Comments