ஹைதராபாத்தில் ஒருங்கிணைந்த உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் திறந்து வைத்தார் / Union Minister of Agriculture and Farmers' Welfare Shri Narendra Singh Tomar inaugurated the Integrated Biological Control Laboratory in Hyderabad
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தேசியத் தாவர சுகாதார மேலாண்மை நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் திறந்து வைத்தார்.
இந்தப் புதிய ஒருங்கிணைந்த உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் அதிநவீன வசதிகளை உள்ளடக்கியது. இந்த ஆய்வகம் அமைந்துள்ள தாவர சுகாதார மேலாண்மை நிறுவனம், நீடித்த வேளாண்மைக்கான பயிற்சிகளையும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பூச்சிக்கொல்லி மேலாண்மை, உயிரி பூச்சிக்கொல்லிகள், உயிரி உரங்கள் ஆகியவற்றை முன்னிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பல்வேறு விதமான பயிர்களில் ஏற்படும் நோய் மேலாண்மை, பூச்சிக்கொல்லிகள் குறித்த பயிற்சி முகாம்களை அளித்து வருகிறது.
0 Comments