Recent Post

6/recent/ticker-posts

ஜி20 நிலையான நிதி செயற்குழு 3வது கூட்டம் / G20 Sustainable Finance Working Group 3rd Meeting

  • ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதி ஆதாரம் குறித்து ஆலோசிப்பதற்கான மூன்றாவது நிதி செயற்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் தொடங்கியது. 
  • நிலையான நிதி செயற்குழு (SFWG) கூட்டத்தின் முதல் கூட்டம் கவுகாத்தியிலும், இரண்டாம் கூட்டம் உதய்பூரிலும் நடைபெற்ற நிலையில், 3வது கூட்டம் மாமல்லபுரத்தில் தொடங்கி உள்ளது. 
  • இதில், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுவது குறித்தும், நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்காக நிதியை செயல்படுத்துவது குறித்தும், சுற்றுச்சூழல் அமைப்பின் திறனை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
  • பசுமை மற்றும் குறைந்த கார்பன் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதற்கான தனியார் மூலதனத்தை ஆதரிக்கும் கொள்கைகள் மற்றும் நிதிக் கருவிகள் ஆகியவை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • கல்வியாளர்கள், சிந்தனைக் குழுக்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர். நிலையான நிதி செயற்குழு கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக மக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
  • முதல் நாளின் தொடக்க அமர்வில் சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்தியத் தலைவர் கீது ஜோஷி, பொருளாதார விவகாரத் துறையைச் சேர்ந்த சாந்தினி ரெய்னா ஆகியோர் உரையாற்றினர். இந்த 3 நாள் கூட்டத்தில் சீனா, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel