Recent Post

6/recent/ticker-posts

2023-24 சக்கரைப் பருவத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நியாயமான விலைக்கு அரசு ஒப்புதல் / Government approves fair price to be offered by sugar mills to sugarcane farmers during 2023-24 sugar season

  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டு சர்க்கரைப் பருவத்திற்கான (அக்டோபர் முதல் செப்டம்பர் வரை) நியாயமான விலை நிர்ணயத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 
  • கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் 10.25 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்புக்கு குவிண்டாலுக்கு ரூ. 315 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 0.1 சதவீத பிழி திறன் அதிகரிப்புக்கு குவிண்டாலுக்கு ரூ.3.07 உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதைக் கருத்தில்கொண்டு, 9.5 சதவீத சர்க்கரை கட்டுமானத்திற்கும் கீழே உள்ள கரும்புக்கு எந்தவித விலைக் குறைப்பும் செய்யக் கூடாது என அரசு முடிவெடுத்துள்ளது. 
  • அத்தகைய விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.291.97 வழங்கப்படும். நடப்பு 2022-23 சர்க்கரைப் பருவத்தில் குவிண்டாலுக்கு ரூ. 282.12 வழங்கப்படுகிறது.
  • இந்தப் பருவத்திற்கான கரும்பு உற்பத்திச் செலவு குவிண்டாலுக்கு ரூ. 157-ஆக உள்ளது. தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை உற்பத்திச் செலவை விட 100.6 சதவீதம் அதிகமாகும். நடப்பு பருவத்தைவிட 2023-24 பருவத்திற்கான விலை 3.28 சதவீதம் அதிகமாகும். 
  • 2023-24 பருவத்தில், 2023 அக்டோபர் 1 முதல் விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்வதற்கு இந்த விலைப் பொருந்தும். இந்த சர்க்கரைத்துறை மிக முக்கியமான விவசாயம் சார்ந்த துறையாக உள்ளது. 
  • இது 5 கோடி கரும்பு விவசாயிகளுக்கும், அவர்களைச் சார்ந்திருப்போருக்கும் வாழ்வாதாரம் வழங்கி வருகிறது. மேலும் சர்க்கரை ஆலைகளில், பணிபுரியும் 5 லட்சம் தொழிலாளர்களும், கரும்பு அறுவடை மற்றும் போக்குவரத்தில் பங்கேற்கும் தொழிலாளர்களுக்கும் இதனால் பயன்கிட்டும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel