உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ தனியார் வளாகம் ஒன்றில் கடந்த 13ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
எட்டு அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரைத் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி அரையிறுதி சுற்றில் வெளியேறிய நிலையில் வெண்கலப் பதக்கத்தை ஜப்பான் அணியுடன் பகிர்ந்து கொண்டது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் எகிப்து மற்றும் மலேசிய அணிகள் மோதின. முதலில் விளையாடிய எகிப்து வீராங்கனை கென்சி அய்மன் மலேசிய வீராங்கனை சின் யிங்யிடம் 3 - 1 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்தார்.
அதன் பின்னர் விளையாடிய எகிப்து வீரர் அலி அபோ, மலேசிய வீரர் டேரன் பிரகாசமுடன் அதிரடியாக விளையாடி 3 - 1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார்.
அடுத்து, மூன்றாவதாக விளையாடிய எகிப்தின் முன்னணி வீராங்கனை பைரோஸ், மலேசியாவின் ஐரா அஸ்மானுடன் விளையாடி 3 - 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் மலேசியாவை 4 - 1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி, எகிப்து அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
0 Comments