Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவுக்கும், பேரிடர் ஆற்றல் உள்கட்டமைப்புக்கான கூட்டணிக்கும் இடையிலான தலைமையக உடன்படிக்கைக்கு அங்கீகாரம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் / Cabinet approves approval of Headquarters Agreement between India and Alliance for Disaster Energy Infrastructure

  • 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி, மத்திய அரசுக்கும் பேரிடர் ஆற்றல் உள்கட்டமைப்புக்கான கூட்டணிக்கும் (சிடிஆர்ஐ) இடையே கையெழுத்தான தலைமையக உடன்படிக்கைக்கு (ஹெச்கியூஏ) அங்கீகாரம் வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடித் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 
  • 2019 செப்டம்பர் 23-ம் தேதி, நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா பருவநிலை நடவடிக்கை உச்சிமாநாட்டின் போது, பிரதமர் திரு நரேந்திர மோடி, சிடிஆர்ஐ-யை தொடங்கிவைத்தார். 
  • மத்திய அரசு தொடங்கிய மிகப்பெரிய உலக அளவிலான முன்முயற்சியான இது, பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் கட்டுப்பாட்டு விஷயங்களில் உலகத் தலைமைக்கான இந்தியாவின் முயற்சிகளாக இது பார்க்கப்பட்டது.
  • சிடிஆர்ஐ-யையும் நிறுவுவதற்கு 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 2019-20 முதல் 2023-24 வரை 5 ஆண்டு காலத்துக்கு சிடிஆர்ஐ-க்கு ரூ.480 கோடி நிதி ஆதரவுக்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.  
  • இதன் தொடர்ச்சியாக 2022-ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி மத்திய அமைச்சரவை, சிடிஆர்ஐ-யை சர்வதேச அமைப்பாக அங்கீகரிக்க ஒப்புதல் வழங்கியது. தலைமையக உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
  • மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இணங்க கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி மத்திய அரசுக்கும், சிடிஆர்ஐ-க்கும் இடையே தலைமையக உடன்படிக்கை கையெழுத்தானது. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel