Recent Post

6/recent/ticker-posts

பேரிடர் நிவாரண நிதியான ரூ.6,194 கோடிக்கு ஒப்புதல் / Disaster relief fund of Rs 6,194 crore approved

  • மாநிலப் பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 19 மாநிலங்களுக்கு 6,194.40 கோடி ரூபாய் வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  ஒப்புதல் அளித்துள்ளார்.
  • ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகையில், தமிழகம், ஆந்திரா, கேரளா, பீஹார், ஹரியானா, இமாச்சல பிரதேசம், கோவா, ஒடிசா, மஹாராஷ்டிரா, பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய 15 மாநிலங்களுக்கு, 2023 - 24ம் ஆண்டுக்கான நிதியாக 4,984.80 கோடி ரூபாய் வழங்கப்படும்.
  • வடகிழக்கு மாநிலமான மேகாலயா மற்றும் சத்தீஸ்கர், தெலுங்கானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு, 2022 - 23ம் ஆண்டுக்காக 1,209.60 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. 
  • இந்த நிதி நடப்பு பருவமழைக் காலத்தில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு உதவியாக இருக்கும்.
  • பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, 2023 - -24ம் ஆண்டில், ஒன்பது மாநிலங்களுக்கு, மாநில நிவாரண நிதிக்கான மத்திய அரசின் பங்காக 3,649.40 கோடி ரூபாயை வழங்க ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel