Recent Post

6/recent/ticker-posts

பிரிக்ஸ் கூட்டமைப்பில் புதிதாக 6 நாடுகள் இணைப்பு / 6 new countries joining BRICS

  • பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் இணைந்து 'பிரிக்' கூட்டமைப்பை 2006-ஆம் ஆண்டில் நிறுவின. அக்கூட்டமைப்பில் 2010-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா இணைக்கப்பட்டவுடன், 'பிரிக்ஸ்' என மாறியது. 
  • வளா்ந்து வரும் பொருளாதார சக்திகள் இணைந்து உருவாக்கிய முக்கிய பன்னாட்டு கூட்டமைப்பாக பிரிக்ஸ் திகழ்ந்து வருகிறது. முக்கியமாக, அக்கூட்டமைப்பு சாா்பில் உருவாக்கப்பட்ட நியூ டெவலெப்மென்ட் வங்கியானது பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது.
  • ஆண்டுதோறும் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் மாநாடு, சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டிலும் நடத்தப்பட்டு வருகிறது. 
  • கரோனா தொற்று பரவல் காலத்தில்கூட கூட்டமைப்பின் மாநாடுகள் காணொலி வாயிலாக நடைபெற்றன. பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-ஆவது மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்கில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. அதில் புதிய உறுப்பினா்களைக் கூட்டமைப்பில் இணைப்பது தொடா்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
  • இந்நிலையில், பிரிக்ஸ் மாநாடு வியாழக்கிழமை நிறைவடைந்தது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 நாடுகளைப் புதிய உறுப்பினா்களாக இணைத்துக் கொள்ள மாநாட்டில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. 
  • அதன்படி, ஆா்ஜென்டீனா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை 2024-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிமுதல் பிரிக்ஸ் கூட்டமைப்பில் அதிகாரபூா்வமாக இணையவுள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel