Recent Post

6/recent/ticker-posts

ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி / ISSF World Championship Shooting Competition

  • அஜர்பைஜானின் பாகு நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 50 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் சாக் ஷி சூர்யவன்ஷி, கிரண்தீப் கவுர் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1,573 புள்ளிகளை குவித்து தங்கப் பதக்கம் வென்றது. இந்தத் தொடரில் இந்தியா வென்ற 6-வது தங்கப் பதக்கமாக இது அமைந்தது.
  • சீனா 1,567 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், மங்கோலியா 1,566 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் பெற்றன. மகளிருக்கான 50 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்தியாவின் டியானா 533 புள்ளிகள் சேர்த்து வெண்கலப் பதக்கம் வென்றார். 
  • ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் கமல்ஜீத், விக்ரம் ஷிண்டே ஆகியாரை உள்ளடக்கிய இந்திய அணி 1,646 புள்ளிகள் சேர்த்து வெண்கலப் பதக்கம் வென்றது. இதே போட்டியின் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ரவீந்தர் சிங் 556 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel