Recent Post

6/recent/ticker-posts

10 வது ஆசியான் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் கூட்டம் / 10th ASEAN Defense Ministers' Meeting 2023

10 வது ஆசியான் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் கூட்டம் / 10th ASEAN Defense Ministers' Meeting 2023

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நவம்பர் 16, 2023 அன்று நடைபெற்ற 10-வது ஆசியான் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஆசியான் பிராந்தியத்தில் உரையாடல் மற்றும் ஒருமித்த கருத்தை ஊக்குவிப்பதில் அதன் பங்கைப் பாராட்டினார். 1982 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட உடன்படிக்கை உள்ளிட்ட சர்வதேச சட்டங்களுக்கு இணங்க சர்வதேச நீர்வழித்தடத்தில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து மற்றும் தடையற்ற சட்டப்பூர்வ வர்த்தகத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

ஆசியான் பிராந்தியம் உட்பட சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாதம் ஒரு கடுமையான அச்சுறுத்தல் என்பதை குறிப்பிட்ட இந்தியா, பயங்கரவாத எதிர்ப்புக்கான நிபுணர் செயல்பாட்டுக் குழுவுக்கு இணைத் தலைமை தாங்க முன்மொழிந்தது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel