Recent Post

6/recent/ticker-posts

உலக உணவு இந்தியா 2023 கண்காட்சியைப் பிரதமர் தொடங்கி வைத்தார் / Prime Minister inaugurated World Food India Programme 2023

உலக உணவு இந்தியா 2023 கண்காட்சியைப் பிரதமர் தொடங்கி வைத்தார் / Prime Minister inaugurated World Food India Programme 2023

புதுதில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இரண்டாவது 'உலக உணவு இந்தியா 2023' என்ற மாபெரும் உணவு கண்காட்சித் திருவிழாவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03-11-2023) தொடங்கி வைத்தார். 

சுய உதவிக் குழுக்களை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ஆரம்பகட்ட மூலதன உதவிகளையும் அவர் வழங்கினார். விழாவில் அமைக்கப்பட்ட கண்காட்சியைப் பிரதமர் மோடி பார்வையிட்டார். 

இந்தியாவை 'உலகின் உணவுக் கூடை'' என்று காட்டுவதையும், 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கொண்டாடுவதையும் இந்த நிகழ்ச்சி முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்திய உணவுப் பதப்படுத்துதல் துறையின் புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் வலிமையை வெளிப்படுத்த பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. உணவுப் பதப்படுத்தும் தொழிலின் பல்வேறு அம்சங்களை மையமாகக் கொண்ட 48 அமர்வுகளுடன் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. 

நிதி அதிகாரமளித்தல், தர உத்தரவாதம், இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெறும்.

இந்த நிகழ்ச்சியில் முக்கிய உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உட்பட 80-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். 

இது 80க்கும் அதிகமான நாடுகளிலிருந்து 1200 க்கும் அதிகமானோர் பங்கேற்கும் விற்பனையாளர் சந்திப்பையும் கொண்டிருக்கும். இதில் நெதர்லாந்து கூட்டு செயல்பாட்டு நாடாக உள்ளது. ஜப்பான் இந்த நிகழ்வுகளில் கவனம் செலுத்தும் நாடாக உள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel