Recent Post

6/recent/ticker-posts

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் / Cabinet approves Central Sector Scheme for providing Drones to the Women Self Help Groups

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் / Cabinet approves Central Sector Scheme for providing Drones to the Women Self Help Groups

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2024-25-ம் ஆண்டு முதல் 2025-26-ம் ஆண்டு வரை ரூ.1261 கோடி மதிப்பீட்டில் ட்ரோன்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது 2023-24-ம் ஆண்டு முதல் 2025-2026-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிகாரமளிப்பதையும், வேளாண் துறையில் ட்ரோன் சேவைகள் மூலம் புதிய தொழில்நுட்பங்களை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை, ஊரக வளர்ச்சித்துறை, உரத் துறை, மகளிர் சுய உதவிக் குழுக்கள், முன்னணி உர நிறுவனங்கள் ஆகியவற்றின் வளங்கள் மற்றும் முயற்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் முழுமையான தலையீடுகளுக்கு இத்திட்டம் ஒப்புதல் அளிக்கிறது.

ட்ரோன்களின் பயன்பாடு பொருளாதார ரீதியாக சாத்தியமான பொருத்தமான குழுமங்கள் அடையாளம் காணப்பட்டு, அடையாளம் காணப்பட்ட தொகுப்புகளில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள 15,000 மகளிர் சுய உதவிக் குழுக்கள் ட்ரோன்களை வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்படும்.

ட்ரோன்கள் வாங்குவதற்கு ட்ரோன் மற்றும் உபகரணங்கள் / துணைக் கட்டணங்களில் 80% முதல் அதிகபட்சம் ரூ.8 லட்சம் வரை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும். சுய உதவிக் குழுக்களின் கிளஸ்டர் அளவிலான கூட்டமைப்பு மீதமுள்ள தொகையை (கொள்முதல் செலவு மற்றும் மானியம் தவிர்த்து) தேசிய வேளாண் உள்கட்டமைப்பு நிதி வசதியின் கீழ் கடனாக பெறலாம். 

மகளிர் சுயஉதவிக் குழுக்களில் 18 வயது மற்றும் அதற்கும் அதிக வயதுடைய உறுப்பினர்களில் ஒருவர் 15 நாள் கட்டாய ட்ரோன் பைலட் பயிற்சி, ஊட்டச்சத்து, பூச்சிக்கொல்லி பயன்பாடு குறித்த வேளாண் நோக்கத்திற்காக கூடுதலாக 10 நாட்கள் பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கிய 15 நாள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார். 

ட்ரோன் நிறுவனங்கள் மூலம் ட்ரோன்களைக் கொள்முதல் செய்தல், பழுதுபார்த்தல், பராமரித்தல் ஆகியவற்றில் சுய உதவிக் குழுக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, ட்ரோன் விநியோக நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு இடையே ஒரு பாலமாக முன்னணி உர நிறுவனங்கள் செயல்படும்.

சுய உதவிக் குழுக்களுடன் ட்ரோன்கள் மூலம் நானோ யூரியா, நானோ டிஏபி போன்ற நானோ உரங்களைப் பயன்படுத்துவதையும் சுய உதவிக் குழுக்கள் ஊக்குவிக்கும். சுய உதவிக் குழுக்கள் நானோ உரத்திற்காகவும் பூச்சிக்கொல்லி பயன்பாடுகளுக்காகவும் ட்ரோன் சேவைகளை விவசாயிகளுக்கு வாடகைக்கு அளிக்கும்.

இத்திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட முன்முயற்சிகள் 15,000 சுய உதவிக் குழுக்களுக்கு நிலையான வணிகம் மற்றும் வாழ்வாதாரத்தை வழங்கும் என்றும், அவர்கள் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இத்திட்டம் விவசாயத்தில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை புகுத்தவும், மேம்பட்ட செயல்திறன், பயிர் மகசூலை அதிகரிக்கவும், விவசாயிகளின் நலனுக்காக செயல்பாட்டு செலவை குறைக்கவும் உதவும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel