Recent Post

6/recent/ticker-posts

மகாத்மா காந்தி சிலையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார் / Defense Minister Rajnath Singh inaugurated the statue of Mahatma Gandhi

மகாத்மா காந்தி சிலையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார் / Defense Minister Rajnath Singh inaugurated the statue of Mahatma Gandhi

டெல்லி ராஜ்காட் அருகே உள்ள காந்தி தர்ஷனில் 10 அடி உயர மகாத்மா காந்தி சிலையை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2023 டிசம்பர் 10, அன்று திறந்து வைத்தார்.

பாதுகாப்பு அமைச்சர் தனது உரையில், இந்தியாவை அந்நிய ஆட்சியிலிருந்து விடுவிப்பதில் முக்கிய பங்கு வகித்த மற்றும் சமூகத்தின் நலிவடைந்த பிரிவினரின் மேம்பாட்டிற்காக பாடுபட்ட தேசத் தந்தைக்கு இந்த சிலை பொருத்தமான அஞ்சலி என்று விவரித்தார்.

வலிமையான, வளமான, தூய்மையான இந்தியாவை உருவாக்கிய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் காந்தியடிகள். பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான நமது அரசு, தேசப்பிதாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வருகிறது.

மக்கள் வங்கித் திட்டம், ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் வீட்டு வசதி திட்டம், பிரதமரின் ஏழைகள் உணவு பாதுகாப்பு திட்டம் மற்றும் தூய்மை இந்தியா இயக்கம் போன்ற திட்டங்கள் அவரது யோசனைகளை அடிப்படையாகக் கொண்டவை" என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

மகாத்மா காந்தி ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார், அதே நேரத்தில் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் நெல்சன் மண்டேலா போன்ற சிறந்த தலைவர்கள் தங்கள் நாடுகளில் உள்ள மக்களின் முன்னேற்றத்திற்கான அவரது சிந்தனைகள் மற்றும் பார்வையிலிருந்து உத்வேகம் பெற்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

மகாத்மா காந்தி, பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் பண்டிட் தீனதயாள் உபாத்யாய் போன்ற புரட்சியாளர்களை பாதுகாப்பு அமைச்சர் நினைவு கூர்ந்தார், அவர்கள் விளிம்புநிலை பிரிவினரின் மேம்பாட்டிற்காக தேசபக்தி மற்றும் அர்ப்பணிப்புடன் உழைத்தனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel