தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 5, 446 பணியிடங்களை நிரப்ப குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு மே மாதம் நடைபெற்றது.
அதன் முடிவுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடைபெற்றது. இதனை 55 ஆயிரத்து 41 பேர் எழுதிய நிலையில், 10 மாதங்கள் கடந்தும் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.
இதுகுறித்து ஏற்கனவே விளக்கம் அளித்துள்ள மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, டிசம்பர் முதல் வாரத்தில் முடிவுகள் வெளியாகும் என்று அறிவித்திருந்தார்.
தற்போது டிசம்பர் முதல் வாரம் முடிவடைந்த நிலையில், முதன்மை தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் கேட்டபோது, விடைத்தாள் மதிப்பீடு செய்ய ஒரு கணினி ஆய்வகம் மட்டுமே இருந்த நிலையில், தற்போது கூடுதலாக மற்றொரு ஆய்வகம் அமைக்கப்பட்டு, மதிப்பீட்டுப் பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தனர்.
குரூப்-2 முதன்மைத் தேர்வு மதிப்பீட்டு பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும், எஞ்சிய பணிகள் ஒரு வாரத்திற்குள் முடிவடையும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குரூப் 2 முதன்மை தேர்வு முடிவானது இன்று (11.01.2024) வெளியானது.
0 Comments