பருவநிலை மாற்றம் குறித்த இரண்டு நாள் மாநாடு / A two day conference on climate change

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை 2024 மே 27 முதல் 28-ம் தேதி வரை தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பருவநிலை மாற்றம் தொடர்பான இரண்டு நாள், மாநாட்டை நடத்தியது.

இந்தியச் சூழலில் பருவநிலை செயல்திட்டம், தரவுகளின் தரக் கட்டுப்பாடு, பருவநிலை கணிப்புகளை மேம்படுத்துதல், மக்களுடனான தொடர்புகளை வலுப்படுத்துதல் போன்றவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இதில் இந்தியா முழுவதிலுமிருந்து நிபுணர்கள் பங்கேற்றனர்.

தில்லி ஐஐடி, புவனேஸ்வர் ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம், காஷ்மீர் பல்கலைக்கழகம், ஐஐஎஸ்சி, அலகாபாத் பல்கலைக்கழகம், வாடியா இன்ஸ்டிடியூட் ஆப் ஹிமாலயன் ஜியாலஜி, இந்திய வானிலை ஆய்வுத் துறை, ஐசிஆர்ஐஎஸ்ஏடி, அறிவியல் தொழில்நுட்ப சிறப்பு மையங்கள் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.