முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (24.2.2025) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களுக்கு பொது மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில் "முதல்வர் மருந்தகம்" என்ற புதிய திட்டம் மூலம் முதல்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 1000 மருந்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
முன்னதாக, முதலமைச்சர் அமைச்சர் அவர்கள் சென்னை, தியாகராய நகர் - பாண்டி பஜாரில், கூட்டுறவுத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தை பார்வையிட்டு, அதன் விவரங்கள் குறித்து கேட்டறிந்து, பொது மக்களுக்கு முதல்வர் மருந்தகத்தின் மூலம் மருந்துகளின் விற்பனையை தொடங்கி வைத்தார்.
0 Comments