முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாநில திட்டக் குழுவின் ஆறாவது கூட்டம் / Sixth meeting of the State Planning Committee chaired by Chief Minister M.K. Stalin

தமிழ்நாடு முதலமைச்சரும், மாநில திட்டக் குழுவின் தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (13.03.2025) தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக் குழுவின் ஆறாவது கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட "முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களிடம் ஏற்படும் தாக்கம் - இறுதி அறிக்கை", "பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைமுறைகள் குறித்த ஆய்வு" மற்றும் "சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வியல் பற்றிய ஆய்வு" ஆகிய மூன்று ஆய்வறிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டார்.