நகர்ப்புற வளர்ச்சித் துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சென்னை கைலாசபுரம் திட்டப்பகுதி, விருதுநகர்- சம்பந்தபுரம், மதுரை - உச்சபட்டி , புதுக்கோட்டை- சந்தைப்பேட்டை, கள்ளக்குறிச்சி - கீரணூர்-2, திருப்பூர் - ஹைடெக் பார்க் நகர், காமராஜர்நகர் பெருந்தொழுவு, காஞ்சிபுரம் - சாலமங்கலம்-1, கடலூர் - கீழகுப்பம்-1 மற்றும் 2, பாலக்கொல்லை, திருவதிகை, ஈரோடு- கவுந்தப்பாடி, திருவாரூர்- கண்டிதம்பேட்டை, கரூர்-வேலம்பாடி திட்டப்பகுதிகளில் ரூ.527.84 கோடியில் கட்டப்பட்டுள்ள 4,978 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதேபோல் ரூ.207.90 கோடியில் கட்டப்பட்ட வணிக வளாகங்களை முதல்வர் திறந்து வைத்தார். மேலும், 4 இடங்களில் திறந்தவெளி விளையாட்டு மைதானங்கள், நவீன உடற்பயிற்சி பூங்காக்கள் என ரூ.14.66 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் திறந்து வைத்தார். இதுதவிர, சென்னையில் பல்வேறு பகுதிகளில் ரூ.255.60 கோடியில் 20 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
0 Comments