ஜெர்மனியின் மூனிச் நகரில் உலக துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி பிரிவு போட்டி நடந்தது. அதில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை ஆர்யா போர்ஸ், இந்திய வீரர் அர்ஜுன் பபுடா இணை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
இறுதிச் சுற்றில் சீனாவின் ஸிபெய் வாங், லிஹாவோ ஷெங் இணையை, இந்திய இணை, 17-7 என்ற புள்ளிக் கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.
மூனிச் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ஏற்கனவே, தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன், மற்றொரு இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments