Recent Post

6/recent/ticker-posts

பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY)க்கு ரூ.1920 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves allocation of Rs. 1920 crore for Pradhan Mantri Kisan Sampada Yojana (PMKSY)

பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY)க்கு ரூ.1920 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves allocation of Rs. 1920 crore for Pradhan Mantri Kisan Sampada Yojana (PMKSY)

15வது நிதி ஆணைய சுழற்சியில் (FCC) (2021-22 முதல் 2025-26 வரை) நடைபெற்று வரும் மத்திய துறை திட்டமான "பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா" (PMKSY)-க்கு ரூ.1920 கோடி கூடுதல் ஒதுக்கீடு உட்பட ரூ.6520 கோடி மொத்த ஒதுக்கீட்டிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஒருங்கிணைந்த குளிர் சங்கிலி மற்றும் மதிப்பு கூட்டல் உள்கட்டமைப்பு (ICCVAI) என்ற கூறு திட்டத்தின் கீழ் 50 பல்பொருள் உணவு கதிர்வீச்சு அலகுகள் மற்றும் பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY) இன் கூறு திட்டத்தின் கீழ் NABL அங்கீகாரத்துடன் கூடிய 100 உணவு சோதனை ஆய்வகங்கள் (FTLs) அமைப்பதற்கு ஆதரவளிக்கும் வகையில் ரூ.1000 கோடியும், பட்ஜெட் அறிவிப்புக்கு ஏற்ப பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY) இன் உணவு பாதுகாப்பு மற்றும் தர உறுதி உள்கட்டமைப்பு (FSQAI) என்ற கூறு திட்டத்தின் கீழ் ரூ.920 கோடியும் அடங்கும்.

15வது FCC இன் போது PMKSY இன் பல்வேறு கூறு திட்டங்களின் கீழ் திட்டங்களை அனுமதிப்பதற்காக ரூ.920 கோடியும்.

ICCVAI மற்றும் FSQAI இரண்டும் PMKSY இன் தேவை சார்ந்த கூறு திட்டங்களாகும். நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள நிறுவனங்களிடமிருந்து முன்மொழிவுகளை அழைப்பதற்காக ஆர்வ வெளிப்பாடு (EOIs) வெளியிடப்படும்.

EOIக்கு எதிராகப் பெறப்பட்ட திட்டங்கள், தற்போதுள்ள திட்ட வழிகாட்டுதல்களின்படி தகுதி அளவுகோல்களின்படி முறையான ஆய்வுக்குப் பிறகு அங்கீகரிக்கப்படும்.

முன்மொழியப்பட்ட 50 பல்பொருள் உணவு கதிர்வீச்சு அலகுகளை செயல்படுத்துவது, இந்த அலகுகளின் கீழ் கதிர்வீச்சு செய்யப்படும் உணவுப் பொருட்களின் வகையைப் பொறுத்து, ஆண்டுக்கு 20 முதல் 30 லட்சம் மெட்ரிக் டன் (LMT) வரை மொத்த பாதுகாப்பு திறனை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் துறையின் கீழ் NABL-அங்கீகாரம் பெற்ற 100 உணவு சோதனை ஆய்வகங்களை அமைப்பது, உணவு மாதிரிகளை பரிசோதிப்பதற்கான மேம்பட்ட உள்கட்டமைப்பை உருவாக்க வழிவகுக்கும், இதன் மூலம் உணவு பாதுகாப்பு தரநிலைகளுக்கு இணங்குவதையும் பாதுகாப்பான உணவுகளை வழங்குவதையும் உறுதி செய்யும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel