உலகக் கோப்பை வில்வித்தை போட்டியின் 8-வது சீசன் சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஜோதி சுரேகா, உலகின் 2-ம் நிலை வீராங்கனையான கிரேட் பிரிட்டனின் எலா கிப்சனுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இதில் ஜோதி சுரேகா 150-145 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் உலகக் கோப்பை வில்வித்தை இறுதி தொடரில் காம்பவுண்ட் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஜோதி சுரேகா படைத்துள்ளார்.


0 Comments