தமிழ்நாடு அரசு, உயிரியல் பன்மைச் சட்டம் 2002, பிரிவு 37(1)ன் கீழ், அரிட்டாபட்டியை நவம்பர் 2022 இல் பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது, காசம்பட்டி மார்ச் 2025 இல் அறிவிக்கப்பட்டது மற்றும் எலத்தூர் ஏரி செப்டம்பர் 2025-ல் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 32.22.50 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட ஈரோடு மாவட்டத்திலுள்ள நாகமலை குன்றினை மாநிலத்தின் நான்காவது உயிரியல் பாரம்பரியத் தளமாக அறிவித்துள்ளது.
பல்லுயிர் பாரம்பரியத் தளங்கள் என்பவை, தனித்துவமான மற்றும் நலிந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை ஆதரிக்கும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகும்.
இவை அரிய, அச்சுறுத்தலுக்கு உள்ளான மற்றும் முக்கிய நலிந்த இனங்களைப் பாதுகாக்கின்றன, பரிணாம முக்கியத்துவத்தைப் பேணிப் பாதுகாக்கின்றன, இவை இயற்கையுடனான கலாசாரப் பிணைப்புகளை வலுப்படுத்துகின்றன.
அதன் நிலப்பரப்பில் உள்ள ஆழமான நீர்நிலைகள், ஆழமற்ற ஓரங்கள், சேற்று நிலங்கள் (மட்பிளாட்கள்) மற்றும் பாறைப் பகுதிகள் ஆகியவை வளமான பல்லுயிர்களை ஆதரிக்கின்றன.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு (2024) நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, இங்கே 138 தாவர இனங்கள், 118 பறவை இனங்கள் (30 இடம்பெயரும் மற்றும் 88 உள்ளூர்), 7 பாலூட்டிகள், 11 ஊர்வனங்கள், 5 சிலந்திகள் மற்றும் 71 பூச்சியினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன.
இங்குள்ள முக்கிய உயிரினங்களில் பெரிய புள்ளிகள் கொண்ட கழுகு, வெளிறிய பூனைப் பருந்து மற்றும் பென்னெல்லிஸ் கழுகு ஆகியவை அடங்கும்.
தாவரங்களைப் பொறுத்தவரை, 48 இனங்கள் மற்றும் 114 பேரினங்களின் கீழ் வரும் 138 தாவர இனங்கள் உள்ளன. இதில் 125 இருவித்திலைத் தாவரங்கள் மற்றும் 13 ஒருவித்திலைத் தாவரங்கள் அடங்கும்.


0 Comments