விஜய் ஹசாரே கோப்பையில் இன்று அருணாச்சலப் பிரதேச அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பீகார் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்திருக்கிறது.
இதன் மூலம் உலக அளவில் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக ஸ்கோர் அடித்த அணி என்ற சாதனையை பிஹார் அணி படைத்திருக்கிறது.
இதற்கு முன்பாக 2022 ஆம் ஆண்டு இதே அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக தமிழ்நாடு அணி 50 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் எடுத்திருந்தது. இதனை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பீகார் அணி முறியடித்திருக்கிறது.
பீகார் அணியின் 14 வயது வீரரான வைபவ சூர்யவன்சி 84 பந்துகளில் 190 ரன்கள் எடுத்து வைபவ் சூர்யவன்சி இரட்டை சதத்தை தவறவிட்டார். அதேபோன்று ஆயுஷ் 56 பந்துகளில் 116 ரன்கள் அடித்தார். சகிப்புல் கனி 32 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார்.


0 Comments